செய்திகள்

கருப்பூர் பகுதியில் நாளை மறுநாள் மின் நிறுத்தம்

Published On 2018-11-21 11:18 GMT   |   Update On 2018-11-21 11:18 GMT
கருப்பூர் பகுதியில் நாளை மறுநாள் பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

சேலம்:

சேலம் கருப்பூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (23-ந்தேதி) நடைபெறுகிறது. எனவே, அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கருப்பூர், தேக்கம்பட்டி, செங்கரடு, வெள்ளாளப்பட்டி, காமலாபுரம், எட்டி குட்டப்பட்டி, கருத்தானூர், சக்கரசெட்டிப்பட்டி, புளியம் பட்டி, நாரணம்பாளையம், ஆணைகவுண்டம்பட்டி, ஹவுசிங் போர்டு, சாமிநாயக்கன்பட்டி, வெத்தலைக்காரனூர், கோட்டக்கவுண்டம்பட்டி, மாமாங்கம், சூரமங்கலம், ஜங்சன், புதிய பஸ் நிலையம், 5 ரோடு, குரங்குசாவடி, நரசோதி பட்டி, ரெட்டியூர் மற்றும் நகரமலை, அடிவாரம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

இந்த தகவலை சேலம் மேற்கு மின்வாரிய செயற்பொறியாளர் மவுலீஸ் வரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News