செய்திகள்

தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் 23-ந் தேதி உள்ளூர் விடுமுறை

Published On 2018-11-20 10:32 GMT   |   Update On 2018-11-20 10:32 GMT
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் 23-ந் தேதியும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. #KarthigaiDeepam #ArunachaleswararTemple
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத் திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 7-வது நாளான இன்று தேரோட்டம் நடந்தது. 5 தேர்கள் பவனி வந்தது. மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தேரோட்டத்திற்கு வருவார்கள் என்பதால் இன்று உள்ளூர் விடுமுறை அளித்து அரசாணை வரப்பெற்றுள்ளது.

அதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் மாநில அரசின் ஆளுமைக்கு உட்பட்டு இயங்கும் அனைத்து அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும், அரசு சார்புடைய நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

அதேபோல தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் 23-ந் தேதியும் (வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தகவலை கலெக்டர் கந்தசாமி தெரிவித்து உள்ளார். #KarthigaiDeepam #ArunachaleswararTemple

Tags:    

Similar News