செய்திகள்

பூண்டி ஏரி நீர்மட்டம் வேகமாக குறைகிறது

Published On 2018-11-15 12:16 GMT   |   Update On 2018-11-15 12:16 GMT
வடகிழக்கு பருவ மழை பெய்யாத நிலையிலும் கண்டலேறு தண்ணீர் வரத்தும் நின்று விட்டதாலும் பூண்டி ஏரியின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
ஊத்துக்கோட்டை:

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி.

இந்த ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுகிறது.

கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி செப்டம்பர் 22ந் தேதி கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அதிகபட்சமாக வினாடிக்கு 1300 கனஅடி வீதம் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் வட கிழக்கு பருவமழை சீசன் தொடங்கியதை கருத்தில் கொண்டு கண்டலேறு தண்ணீர் கடந்த 28-ந் தேதி நிறுத்தப்பட்டது.

செப்டம்பர் 22-ந் தேதியில் இருந்து கடந்த 28-ந் தேதி வரை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 1.604 டி.எம்.சி. தண்ணீர் வந்தது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

கடந்த 28-ந் தேதி பூண்டி ஏரியில் தண்ணீர் மட்டம் 24 . 72 அடியாக இருந்தது. பின்னர் வடகிழக்கு பருவ மழை பெய்யவில்லை. கண்டலேறு தண்ணீர் வரத்தும் நின்று விட்டதாலும் பூண்டி ஏரியின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

இன்று காலை ஏரியின் நீர்மட்டம் 22.25 அடியாக இருந்தது. 485 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

பூண்டியில் இருந்து புழல் ஏரிக்கு வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. சென்னை குடிநீர் வாரியத்துக்கு 18 கனஅடி வீதம் அனுப்பப்படுகிறது. பூண்டி ஏரியில் தண்ணீர் மட்டம் 19 அடியாக குறைந்தால் புழல் ஏரிக்கு தண்ணீர் திறக்க முடியாது. #tamilnews
Tags:    

Similar News