செய்திகள்

வடபழனியில் லாட்ஜில் சூதாடிய 13 பேர் கைது

Published On 2018-11-10 09:21 GMT   |   Update On 2018-11-10 09:21 GMT
வடபழனியில் லாட்ஜில் சூதாடிய 13 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை:

வடபழனி விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தனியார் விடுதிகளில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக புகார்கள் வந்தன.

இதையடுத்து வடபழனி உதவி கமி‌ஷனர் ஆரோக்ய பிரகாசம் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் விடுதிகளை தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு வடபழனி ஆற்காடு சாலையில் உள்ள தனியார் விடுதியில் போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது ஒரு அறையில் சூதாட்டம் நடைபெற்று வந்தது தெரியவந்தது. சூதாட்டத்தில் ஈடுபட்ட அபுசுசியான், பெரியசாமி, வெங்கலியான், சதிஷ்குமார், சபீர், தமிம் அன்சாரி உள்ளிட்ட 13 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.27ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News