செய்திகள்

டி.பி. சத்திரத்தில் 4-வது மாடியில் இருந்து விழுந்து வாலிபர் பலி

Published On 2018-10-31 09:22 GMT   |   Update On 2018-10-31 09:22 GMT
சென்னை டி.பி. சத்திரத்தில் 4-வது மாடியில் இருந்து விழுந்து வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போரூர்:

சென்னை டி.பி. சத்திரத்தில் நான்கு மாடிகள் கொண்ட குடிசை மாற்று வாரிய குடியிருப்பு உள்ளது.

இங்குள்ள ‘ஈ’ பிளாக்கில் வசித்து வந்தவர். பரத் (வயது20). மேளம் அடிக்கும் தொழிலாளி.

நேற்று இரவு அவர் தூங்குவதற்காக வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றார். அப்போது திடீரென கால் தவறி கீழே விழுந்தார்.

இதில் தலையில் படுகாய மடைந்த பரத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரத் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து டி.பி.சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News