செய்திகள்

கேரளாவில் தொண்டி மீனவர் பலி

Published On 2018-10-27 09:11 GMT   |   Update On 2018-10-27 09:11 GMT
கேரளாவில் தொண்டி மீனவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொண்டி:

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள கடற்கரைகிராமமான காரங்காட்டைச் சேர்ந்தவர் ஐசக் நியூட்டன். இவரது மனைவி அந்தோணியம்மாள்.

இவர்களது மூத்த மகன் ரூசோ (22). பட்டதாரியான இவர் கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், சக்தி குலங்கரா கடல் பகுதியில் மீன் பிடிக்க விசைப் படகில் சென்றார். கடலில் ஏற்பட்ட சுழலில் சிக்கி மூச்சுத்திணறி பலியானார்.

இவரது உடல் பிரேத பரிசோதனைக்குப்பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, சொந்த ஊரான காரங்காட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

Tags:    

Similar News