செய்திகள்

வேலூர் மார்க்கெட், சி.எம்.சி. அருகில் சாலையோரம் நிறுத்திய பைக்குகள் திருட்டு

Published On 2018-10-22 10:44 GMT   |   Update On 2018-10-22 10:44 GMT
வேலூரில் சாலையோரம் நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்களை மர்மகும்பல் திருடி வருகின்றனர்.

வேலூர்:

வேலூர் அடுத்த பிள்ளையார்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் மதன் (வயது 33). இவர் நேதாஜி மார்க்கெட் எதிரில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கடைக்கு சென்றார். இதனை பயன்படுத்தி கொண்ட மர்ம நபர்கள் பைக்கை திருடி சென்று விட்டனர். பலவன்சாத்து கிராமத்தை சேர்ந்த ஆசிர்வாதம் மகன் பிரேம்தாஸ் (வயது 28). வேலூர் வந்த இவர் சி.எம்.சி. அவுட்கேட் அருகே காட்பாடி சாலையில் பைக்கை நிறுத்தி விட்டு சென்றார். மர்ம நபர்கள் பைக்கை திருடி சென்றுவிட்டனர்.

இது குறித்து வேலூர் வடக்கு குற்றபிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தப்படும் வாகனங்களை குறிவைத்து திருடி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மணியக்கார தெருவை சேர்ந்த பாலு (55). இவரது பைக்கை வீட்டுக்கு வெளியே நிறுத்தியிருந்தார். அதனை மர்ம கும்பல் திருடி சென்றுவிட்டனர்.

அம்மூர் கிருஷ்ணாநகரை சேர்ந்த பாஸ்கரன் (52) வீட்டு முன்பு நிறுத்தியிருந்த பைக் திருடுபோனது. இதுபற்றி ராணிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஆற்காடு தாலுகா மய்யூர் கிராமத்தை சேர்ந்த பசுபதி (41) என்பவர் பரதராமியில் உள்ள ஹாலோ பிரிக்ஸ் கம்பெனி அருகே பைக் நிறுத்திவிட்டு சென்றார்.அதனை திருடி சென்றுவிட்டனர். திமிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News