செய்திகள்

சென்னையில் ஒரே நாளில் 6 பேரிடம் செல்போன் பறிப்பு

Published On 2018-10-21 09:30 GMT   |   Update On 2018-10-21 09:30 GMT
சென்னையில் ஒரே நாளில் 6 பேரிடம் செல்போன் பறிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் ஒரே நாளில் 6 பேரிடம் செல்போன் பறிக்கப்பட்டுள்ளது.

நொளம்பூரில் விஜய், கோடம்பாக்கத்தில் சுவேதா, பாண்டிபஜாரில் குகன், புளியந்தோப்பில் ஹரிபிரியா, தேனாம்பேட்டையில் கார்முகிலன், கோவிந்த ராஜன் ஆகிய 6 பேரிடம் அடுத்தடுத்து செல்போன்களை மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் பறித்து தப்பி சென்று விட்டனர்.

இந்த செல்போன் பறிப்பில் ஈடுபட்டது ஒரே நபர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News