செய்திகள்

ஆண்டிமடத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2018-09-23 16:30 GMT   |   Update On 2018-09-23 16:30 GMT
ஆண்டிமடத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஜெயங்கொண்டம்:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஐந்து முனை பிரச்சார இயக்கம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 17ஆம்தேதி முதல் 23-ம்தேதி வரை தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி நேற்று அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வருகை வந்த பிரச்சார இயக்கத்தினருக்கு அக்கட்சி நிர்வாகிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது ஜெயங்கொண்டம் அனல்மின் திட்டத்தை உடனே துவங்க வேண்டும். மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும். பெட்ரோல், டீசல் சமையல் எரிவாயு விலையேற்றத்தை குறைக்க வேண்டும். 

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி கருக்கை கிராமத்தில் 33 விவசாயிகளுக்கு நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிலத்தை பட்டா மாற்றம் செய்து கொடுக்க வேண்டும், ஆண்டிமடம் தாலுகா அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும், அப்பகுதி விவசாயிகளுக்கு மின்இணைப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரச்சார இயக்கத்தின் நிர்வாகிகள் பேசினர். 

பிரசார இயக்கத்திற்கு அசோக்ராஜ் தலைமை வகித்தார். வழக்கறிஞர் லாரன்ஸ், பிரபு கிளைச் செயலாளர்கள் ஞான சேகரன், கவர்னர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மாநில செயற்குழு உறுப் பினர் முன்னாள் எம்.எல்.ஏ. பழனிசாமி, திருத் துறைப்பூண்டி முன்னாள் எம்.எல்.ஏ. உலக நாதன், மாநில செய லாளர் சந்திரகுமார், மாவட்ட துணைச் செயலாளர் ராமநாதன், மாவட்ட குழு உறுப்பினர் ராஜா பெரியசாமி, ஒன்றிய பொருளாளர் கோபால கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை விளக்கிப்பேசினர். ஆனந்தன், சின்னதுரை, பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

பிரச்சாரமானது ஆண்டிமடத்தில் துவங்கி ஜெயங்கொண்டத்தில் நிறைவடைந்தது. முன்னதாக மாதர் சங்க நிர்வாகி தமயந்தி வரவேற்றார். முடிவில்  ஒன்றிய குழு உறுப்பினர் வடிவேல் நன்றி கூறினார்.
Tags:    

Similar News