செய்திகள்

கட்டுமான பணியின்போது விபத்து - 10வது மாடியில் இருந்து தவறி விழுந்த 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

Published On 2018-09-11 04:35 GMT   |   Update On 2018-09-11 04:35 GMT
சென்னையில் கட்டுமானப் பணி நடைபெற்ற அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழுந்த 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். #LabourersDied
சென்னை:

சென்னை சைதாப்பேடையில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. நேற்று இரவு 10-வது தளத்தில் பணி நடைபெற்றபோது பிரவீன் மற்றும் கோவிந்தன் ஆகிய தொழிலாளர்கள் தவறி கீழே விழுந்தனர். இதில் இருவரும் உடல் சிதறி உயிரிழந்தனர்.

இதுபற்றி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். உயிரிழந்த இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

மேலும்இந்த விபத்து தொடர்பாக கட்டிட பொறியாளர் பிரகாஷ் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #LabourersDied

Tags:    

Similar News