செய்திகள்
கோயம்பேட்டில் ஆம்னி பஸ் மோதி தொழிலாளி பலி
கோயம்பேட்டில் ஆம்னி பஸ் மோதிய விபத்தில் மூட்டை தூக்கும் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
போரூர்;
செஞ்சியைச் சேர்ந்தவர் முனியன் (வயது50) மூட்டை தூக்கும் தொழிலாளி. இன்று காலை அவர் கோயம்பேடு மார்க்கெட் அருகே உள்ள சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியே சென்னையில் இருந்து ஈரோட்டிற்கு சென்ற ஆம்னி பஸ் எதிர்பாராத விதமாக முனியன் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கோயம்பேடு போக்குவரத்து போலீசார் வழக்குபதிவு செய்து ஆம்னி பஸ் டிரைவர் ஈரோட்டைச் சேர்ந்த லோகநாதனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
செஞ்சியைச் சேர்ந்தவர் முனியன் (வயது50) மூட்டை தூக்கும் தொழிலாளி. இன்று காலை அவர் கோயம்பேடு மார்க்கெட் அருகே உள்ள சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியே சென்னையில் இருந்து ஈரோட்டிற்கு சென்ற ஆம்னி பஸ் எதிர்பாராத விதமாக முனியன் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கோயம்பேடு போக்குவரத்து போலீசார் வழக்குபதிவு செய்து ஆம்னி பஸ் டிரைவர் ஈரோட்டைச் சேர்ந்த லோகநாதனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews