செய்திகள்

பெரம்பலூரில் நடந்த தட்டச்சு தேர்வில் 952 பேர் பங்கேற்பு

Published On 2018-09-09 16:44 GMT   |   Update On 2018-09-09 16:44 GMT
பெரம்பலூரில் நடந்த தட்டச்சு தேர்வில் 952 பேர் பங்கேற்றனர்.
பெரம்பலூர்:

தமிழ்நாடு தொழில்நுட்ப துறை நடத்தும் தட்டச்சு தேர்வு பெரம்பலூர்-எளம்பலூர் சாலையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனத்தின் பொதிகை பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று தொடங்கியது. இதில் தமிழ், ஆங்கில மொழியில் ஜூனியர் கிரேடில் 4 பிரிவுகளுக்கும், சீனியர் கிரேடில் ஒரு பிரிவிற்கும் நடைபெற்ற தட்டச்சு தேர்வில் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கடலூர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த பெண்கள், ஆண்கள் என மொத்தம் 952 பேர் பங்கேற்றனர். 2-வது நாளாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடர்ந்து தட்டச்சு தேர்வுகள் நடக்கிறது.

இதில் ஜூனியர் கிரேடில் ஒரு பிரிவிலும், சீனியர் கிரேடில் 3 பிரிவுகளிலும் புதுமுக இளநிலையில் 2 பிரிவுகளிலும், உயர் வேக தேர்வில் 2 பிரிவுகளிலும் என மொத்தம் 8 பிரிவுகளில் ஆண்கள், பெண்கள் தட்டச்சு செய்ய உள்ளனர் என்று பெரம்பலூர் மாவட்ட மைய தேர்வு மைய பிரதிநிதி கிருஷ்ணமூர்த்தி, மைய முதன்மை கண்காணிப்பாளரும், பொதிகை பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வருமான சுப்பிரமணியன் ஆகியோர் தெரிவித்தனர். துணை மைய கண்காணிப்பாளராக செல்வகுமார், விக்னேஷ் ஆகியோர் செயல்பட்டனர். அறை கண்காணிப்பாளராக 12 பேர் செயல்பட்டனர். 
Tags:    

Similar News