செய்திகள்

தொடர் வழிப்பறி- கோவையில் 3 வாலிபர்கள் அதிரடி கைது

Published On 2018-09-07 11:05 GMT   |   Update On 2018-09-07 11:05 GMT
கோவையில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வந்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
குனியமுத்தூர்:

கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த தொழில் அதிபர் பிரதாப் சிங் சம்பவத்தன்று கோவைக்கு வந்தார். கோவையில் ஹார்ட்வேர்ஸ் பொருட்களை வாங்கிக்கொண்டு தனது சொகுசு காரில் இரவு மீண்டும் பாலக்காட்டுக்கு புறப்பட்டார்.

கார் பாலக்காடு ரோடு மரப்பாலம் என்ற இடத்தில் சென்றபோது ஒரு கும்பல் காரை வழிமறித்தது.பிரதாப் சிங் காரை நிறுத்தினார். அப்போது அந்த கும்பல் கத்தியை காட்டி மிரட்டி பிரதாப் சிங்கிடம் இருந்த ரூ. 1 ½ லட்சம் பணத்தை வழிப்பறி செய்தனர். காருக்குள் இருந்து இறக்கி விட்டு தாக்கி காரையும் பறித்துச்சென்றனர்.

அதிர்ச்சியடைந்த பிரதாப் சிங் இது குறித்து மதுக்கரை போலீசில் புகார் செய்தார். கொள்ளையர்களை கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் உத்தரவிட்டார். டி.எஸ்.பி. வேல்முருகன் மேற்பார்வையில் மதுக்கரை இன்ஸ்பெக்டர் தங்கபாண்டியன் தலைமையில் போலீசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர். #tamilnews
Tags:    

Similar News