லைஃப்ஸ்டைல்

மார்பக புற்றுநோய் - மேமோகிராம் சிக்கல்

Published On 2019-02-02 06:41 GMT   |   Update On 2019-02-02 06:41 GMT
மார்பகப் புற்றுநோய்க்கு மேமோகிராம் பரிசோதனை தானே பரவலாக மேற்கொள்ளப்படுகிறது. இதில் அப்படி என்ன சிக்கல் இருக்கிறது? என நீங்கள் கேட்கலாம். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஒவ்வொரு பெண்ணும் பருவ வயதை எட்டியதும தங்கள் மார்பை தாங்களே சுயமாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கட்டிகள் தென்பட்டாலே அது மார்பகப்புற்றுநோயோ என்று அச்சம் கொள்ளத் தேவையில்லை. பலரும் அவசரப்பட்டு மனதையும், உடலையும் வருத்திக்கொள்கிறார்கள்.

மார்பகப் புற்றுநோய்க்கு மேமோகிராம் பரிசோதனை தானே பரவலாக மேற்கொள்ளப்படுகிறது. இதில் அப்படி என்ன சிக்கல் இருக்கிறது? என நீங்கள் கேட்கலாம். பொதுவாக பருவ வயது பெண்களின் மார்பக திசுக்கள் சற்று அடர்த்தியுடன் காணப்படும். எனவே இதில் எக்ஸ்ரே கதிர்கள் சரியாக ஊடுருவ முடியாமல் வெறும் வெள்ளையாக படம் வந்து விடவும் வாய்ப்பு உண்டு.

அப்படி தெளிவான முடிவு கிடைக்காமல் போய் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த நேரத்தில் தகுந்த சிகிச்சை அளிக்க முடியாமல் போவது தான் சிக்கல். எனவே தான் 40 வயதுக்கு உட்பட்ட பெண்களை மேமோகிராம் பரிசோதனைக்கு உட்படுத்துவது சரியான முடியாக இருக்காது.

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுப்பதே மார்பக நீர்க்கட்டிகளை கண்டறியவும் மிகச்சிறந்த பரிசோதனை. கைகளுக்கு தட்டுப்படாமல் அவை சென்டிமீட்டருக்கும் குறைவாக உள்ள நுண்ணிய கட்டிகளையும் இது காட்டிச் கொடுத்து விடும். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் மேமோகிராம் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் டெஸ்ட் இணைந்தே மேற்கொள்ளப்படுகிறது.

கட்டிகள் கண்டறியப்பட்டு அதன் தன்மைக்கு ஏற்ப அடுத்தக்கட்ட சிகிச்சைகளை உடனடியாக மேற்கொள்ளவும், நீர்க்கட்டி இருந்தால் பெரும்பாலும் அதாவது 90 சதவிகிதம் பயப்படத் தேவையில்லை. இவ்வகை பாதிப்புகள் மார்பகத்தில் வருவது வெகு இயல்பானது. பெண்களுக்கு ஏற்படும் உடற்கூறு வளர்ச்சி மாற்றத்தால் உண்டாகும் சாதாரண நிகழ்வு. மிக இளம் வயதிலேயே சிலருக்கு நரை முடி வந்து விடுகிறது. தலை வழுக்கை ஆகிவிடுகிறது. இதை எப்படி நார்மல் என்று ஏற்றுகொள்கிறோமோ அதைப் போன்று தான் நீர்க்கட்டியும்.



35 முதல் 55 வயது உள்ள பெரும்பாலான பெண்களுக்கு இவை வரும் சாத்தியக்கூறு அதிகம். ஊசி வாயிலாக அந்த நீரை உறிஞ்சி எடுப்பதே எளிய சிகிச்சை. வெகு எளிதாக விரைவாக அதாவது ஒரிரு நிமிடங்களுக்குள் பாதிப்பில் இருந்து குணப்படுத்திவிடலாம்.

சிலருக்கு மார்பகத்துக்குள் வெவ்வேறு இடங்களில் அடிக்கடி நீர்க்கட்கள் உருவாகும். இதற்கும் பெரிய அளவில் பயப்படத் தேவையில்லை. சரியாக கணிக்கத் தெரிந்த மருத்துவர்கள் ஒவ்வொரு முறையும் ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனை மேற்கொள்ளாமலேயே அவ்வப்போது ஊசி வாயிலாக நீரை அகற்றி விடுவார்கள். எடுத்த நீரை பரிசோதனைக்கு அனுப்பக்கூட அவசியமில்லை.

ஆனால் ஒரே இடத்திலேயே திரும்பத் திரும்ப கட்டி உண்டானால் வேறு ஏதாவது பாதிப்பு இருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டும். நீர்க்கட்டியில் இருந்து உறிஞ்சி எடுப்பப்படும் நீர் மஞ்சள், பச்சை என பலவித நிறங்களில் காணப்படலாம். அதனால் எந்தப் பாதிப்பும் கிடையாது. ரத்தமாக வந்தால் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும்.

சில நேரம் நீர்க்கட்டிக்கு உட்புறத்தில் சதைக்கட்டி இருக்க வாய்ப்பு உண்டு. இப்படிப்பட்ட நிலையில் அறுவைச்சிகிச்சை செய்து நீக்க நேரிடும். ஆனால் பாதிப்போடு வரும் பெண்ணில் நூரில் ஒருவருக்கே இத்தகைய நிலை ஏற்படும். 
Tags:    

Similar News