லைஃப்ஸ்டைல்
மட்டன் சேர்த்து செய்யும் கஞ்சி அருமையாக இருக்கும். இன்று இந்த கஞ்சியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
அரிசி - 2 கப்
வறுத்த சிறு பருப்பு - 1 கப்
மட்டன் - அரை கிலோ
பெ.வெங்காயம் - 3
கேரட் - 4
உருளைக்கிழங்கு - 2
பட்டாணி - சிறிதளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
மசாலா தூள் - தேவைக்கு
மிளகாய் தூள் - தேவையான அளவு
தக்காளி - 4
பட்டை, ஏலக்காய் - சிறிதளவு
இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு
அரிசி - 2 கப்
வறுத்த சிறு பருப்பு - 1 கப்
மட்டன் - அரை கிலோ
பெ.வெங்காயம் - 3
கேரட் - 4
உருளைக்கிழங்கு - 2
பட்டாணி - சிறிதளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
மசாலா தூள் - தேவைக்கு
மிளகாய் தூள் - தேவையான அளவு
தக்காளி - 4
பட்டை, ஏலக்காய் - சிறிதளவு
இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு
செய்முறை:
பெரிய வெங்காயம், கேரட், உருளைக்கிழங்கு, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மட்டனை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அரிசியை சிறிதுநேரம் ஊற வைத்துக்கொள்ளவும்.
குக்கரில் இறைச்சி, மிளகாய்தூள், மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு விழுது, உருளைக்கிழங்கு, பட்டாணி, தக்காளி, கேரட், உப்பு, போதுமான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
நன்கு வெந்ததும் குக்கரை திறந்து அரிசி, பருப்பு சேர்த்து போதுமான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
நன்கு வெந்ததும் ஆற வைத்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்.
வாணலியில் நெய் ஊற்றி அது சூடானதும் ஏலக்காய், கருவா பட்டை, வெங்காயம், மசாலா தூள் சேர்த்து வதக்கி அரைத்துவைத்த கலவையில் சேர்க்கவும்.
பின்னர் அதனை அடுப்பில் வைத்து தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி விடலாம்.
சுவையான மட்டன் கஞ்சி ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.