லைஃப்ஸ்டைல்

சூப்பரான பன்னீர் பாலக் பரோட்டா

Published On 2019-04-05 09:42 GMT   |   Update On 2019-04-05 09:42 GMT
குழந்தைகளுக்கு பன்னீர் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று பன்னீர், பாலக்கீரை சேர்த்து அருமையான பரோட்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

மேல் மாவிற்கு…


கோதுமை மாவு - 2 கப்,
உப்பு - தேவைக்கு,
பாலக் கீரை - 1 கட்டு,
கோதுமை மாவு - 3 கப்,
அரைத்த பச்சைமிளகாய் - 1/4 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
சீரகத்தூள் - 1/4 டீஸ்பூன்,
நெய் அல்லது வெண்ணெய், எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்.

ஸ்டஃப்பிங்க்கு…

துருவிய பன்னீர் - 1/4 கப்,
நறுக்கிய பச்சைமிளகாய் - 3,
கொத்தமல்லித்தழை - 4 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.

 


செய்முறை :

பாலக் கீரையை நன்றாக சுத்தம் செய்து வேகவைத்து அரைத்துக் கொள்ளவும்.

இத்துடன் கோதுமை மாவு, உப்பு, மஞ்சள் தூள், சீரகத்தூள், அரைத்த பச்சைமிளகாய், எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன் சேர்த்து மிருதுவான சப்பாத்தி மாவாக பிசைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

கொத்தமல்லித்தழை, பன்னீர், பச்சைமிளகாய், உப்பு அனைத்தையும் ஒன்றாக கலந்து வைக்கவும்.

மாவை சம அளவு உருண்டைகளாக உருட்டி, பூரி அளவிற்கு திரட்டி பன்னீர் கலவையை நடுவில் வைத்து நன்றாக மூடி கையால் தட்டி மெதுவாக திரட்டி, சூடான தோசைக்கல்லில் போட்டு நெய் அல்லது வெண்ணெய் விட்டு இருபுறமும் நன்கு வெந்து பொன்னிறமாக வந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.

சூப்பரான பன்னீர் பாலக் பரோட்டா ரெடி. 

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
Tags:    

Similar News