லைஃப்ஸ்டைல்

அருமையான உருளைக்கிழங்கு பிரியாணி

Published On 2019-04-01 08:37 GMT   |   Update On 2019-04-01 08:37 GMT
குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று உருளைக்கிழங்கை வைத்து அருமையான பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி - 1 கப்,
உருளைக்கிழங்கு - 2,
வெங்காயம் 2,
தக்காளி - 2,
பச்சை மிளகாய் - 2,
கொத்தமல்லி, புதினா -  1/4 கப்,  
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
பட்டை - 2, கிராம்பு - 3,
ஏலக்காய் - 3,
அன்னாசி பூ - 1,
பிரியாணி இலை - 1,
கரம் மசாலா - 1 டீஸ்பூன்,
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்,
எண்ணெய், நெய் - 1/4 கப்,
உப்பு - தேவைக்கு.



செய்முறை :

தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

அரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.

உருளைக்கிழங்கை தோல் நீக்கி சதுரமான துண்டுகளாக வெட்டிகொள்ளவும்.

குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், அன்னாசி பூ, பிரியாணி இலை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.

அடுத்து அதில் உருளைக்கிழங்கு சேர்த்து தேவையான அளவு தண்ணீர், கரம் மசாலா, கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை போட்டு கொதி வந்தவுடன் அரிசியை சேர்த்து மிதமான சூட்டில் 15 நிமிடம் வைத்து இறக்கவும்.

இப்பொழுது கமகமக்கும் சுவையான உருளைக்கிழங்கு பிரியாணி தயார்.

இதனுடன் தயிர் பச்சடி, குருமா மற்றும் உருளைக்கிழங்கு சில்லி சேர்த்து பரிமாறவும்.

குறிப்பு: பிரியாணி செய்யும்பொழுது வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கினால் சுவை அதிகரிக்கும்.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
Tags:    

Similar News