லைஃப்ஸ்டைல்

சுவையான மாலை நேர ஸ்நாக்ஸ் குணுக்கு

Published On 2019-02-22 09:38 GMT   |   Update On 2019-02-22 09:38 GMT
வீட்டில் மீந்து போன இட்லி மாவைக் கொண்டு எப்படி குணுக்கு செய்வதென்று பார்க்கலாம். அதைப் படித்து, மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது செய்து சாப்பிடுங்கள்.
தேவையான பொருட்கள்:

இட்லி மாவு - 2 பெரிய கப்
மைதா - 4 டேபிள் ஸ்பூன்
சமையல் சோடா - 1 சிட்டிகை
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 5
கறிவேப்பிலை - சிறிது
கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு)



செய்முறை:

வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் இட்லி மாவு, மைதா சேர்த்து, அத்துடன் வேண்டுமானால் சிறிது தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் சோடா உப்பு சேர்த்து நன்றாக கலந்த பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, மாவில் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஒரு சிறு கரண்டியில் மாவை எடுத்து, எண்ணெயில் ஊற்றி பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

இதேப் போல் அனைத்து மாவையும் பொரித்து எடுத்தால், குணுக்கு ரெடி!!!

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News