லைஃப்ஸ்டைல்

வீட்டிலேயே செய்யலாம் சாக்லேட் பேடா

Published On 2019-01-30 08:41 GMT   |   Update On 2019-01-30 08:41 GMT
சாக்லேட் பேடாவை கடையில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே குழந்தைகளுக்கு விருப்பமான சாக்லேட் பேடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கோயா (khoya) - 1 கப்
கோக்கோ பவுடர் - 2 மேஜைக்கரண்டி
சக்கரை - 1/4 கப்
வெண்ணிலா எசென்ஸ் - 1/2 தேக்கரண்டி
பாதாம் - 20
வெண்ணெய் - 1 தேக்கரண்டி


 
செய்முறை :

10 பாதாமை பொடியாக வெட்டிக்கொள்ளவும்.

10 பாதாமை துருவிக்கொள்ளவும்.

அடி கனமான பாத்திரத்தில், கோயா, சாக்லேட் பவுடர், சக்கரை, வெண்ணெய், பொடியாக வெட்டிய பாதாம், எல்லாவற்றையும் சேர்த்து அடுப்பில் வைத்துச் சூடு செய்யவும். தீ மிதமாக இருக்கவேண்டும். நன்கு கலந்து விடவும்.

எல்லாம் கலந்து நன்கு இளகும். இப்பொழுது, வெண்ணிலா எசன்ஸ் சேர்க்கவும். மிதமான தீயில் கிளறிக்கொண்டே இருக்கவும். ஓரங்கள் ஒட்டாமல் கெட்டியாகி கரண்டியுடன் சேர்ந்து கலவைச் சுற்றும். அப்பொழுது அடுப்பை அணைத்து விடவும்.

இந்த சாக்லேட் கலவையை ஒரு தட்டில் கொட்டி ஆறவைக்கவும். கை பொறுக்கும் சூட்டிற்கு வந்தவுடன், கையில் நெய் தடவிக்கொண்டு, சம அளவு உருண்டைகளாக பிரித்து சிறிய பாதுஷா வடிவில் தட்டலாம். அல்லது ஒரு சிறிய வட்டமான மூடியில் நெய் தடவி,  சீவிய பாதாம் சிறிது தூவி, அதன் மேல் சாக்லேட் கலவையை வைத்து, வட்டமாகத் தட்டவும். பேக்கிங்  ஷீட்டில் வைத்து 30 நிமிடம் பிரிட்ஜில் வைக்கலாம்.

சூப்பரான சாக்லேட் பேடா ரெடி.

குறிப்புகள்

தீயை எப்பொழுதும் மிதமாக வைக்கவேண்டும். முதலில் பிசுபிசுப்பாக இருப்பது போல இருக்கும். ஆனால் பிறகு, காய்ந்து விடும். ஓரிரு நாட்களில் சாப்பிட்டு விட வேண்டும்.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Tags:    

Similar News