லைஃப்ஸ்டைல்

ஜீரண சக்தியை அதிகரிக்கும் வெந்தயக்கீரை சாதம்

Published On 2019-06-08 04:25 GMT   |   Update On 2019-06-08 04:25 GMT
வெந்தயக்கீரை ஜீரண சக்தியை அதிகரித்து பசியை தூண்டுகிறது. சிறுநீர் உறுப்புகளை சுத்தம் செய்கிறது. இன்று இந்த கீரையை வைத்து சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பச்சரிசி - 1 கப்,
வெந்தயக்கீரை - 1 கட்டு,
தக்காளி - 1,
வெங்காயம் - 1,
இஞ்சி - 1 துண்டு,
பூண்டு - 5 பல்,
பச்சை மிளகாய் - 3,
மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் - தலா அரை டீஸ்பூன்,
சீரகத்தூள், தனியாத்தூள், கரம் மசாலா - தலா 1 டீஸ்பூன்,
தேங்காய்ப்பால் - ஒரு கப்,
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.



செய்முறை :

வெந்தயக்கீரையில் இலையை மட்டும் ஆய்ந்து நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

இஞ்சி, பூண்டு, மிளகாயை நசுக்கி கொள்ளவும்.

குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நசுக்கி வைத்த பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாயை போட்டு வதக்குங்கள்.

பிறகு வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.

தக்காளி குழைய வதங்கியதும் கீரையை சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள், தனியாத்தூள், கரம் மசாலா சேர்த்து வதக்குங்கள்.

பச்சை வாடை போனதும், இந்தக் கலவையோடு தேங்காய்ப்பால், நான்கு கப் தண்ணீர், தேவையான உப்பு, அரிசி ஆகியவற்றைச் சேர்த்து வேக வையுங்கள். ஒரு விசில் வந்ததும் தீயை மிதமாக்கி, இரண்டு நிமிடங்கள் வைத்து இறக்குங்கள்.

சூப்பரான சத்தான வெந்தயக்கீரை சாதம் ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News