லைஃப்ஸ்டைல்

இரும்புசத்து நிறைந்த முடக்கத்தான் சட்னி

Published On 2019-06-05 04:42 GMT   |   Update On 2019-06-05 04:42 GMT
முடக்கத்தான் கீரையில் கால்சியம், இரும்புசத்து நிறைந்துள்ளது. மூட்டு வலிக்கு சிறந்த நிவாரணியாகும். இன்று கீரையை வைத்து சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

முடக்கத்தான் கீரை - 1 கட்டு
நறுக்கிய கொத்தமல்லி தழை - 1 கப்
தயிர் - ½ கப்
சின்னவெங்காயம் - 8
நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்
கடுகு - ½ ஸ்பூன்
உளுந்து பருப்பு - 2 ஸ்பூன்
கடலைபருப்பு - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
புளி கரைசல் - 1 ஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்



செய்முறை:

முடக்கத்தான் கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

கொத்தமல்லியை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, உளுந்து பருப்பு, கடலை பருப்பு, பச்சை மிளகாய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் போட்டு லேசாக வதக்கி இறக்கவும்.

பின்னர் அதனை மிக்சியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

அதனுடன் வல்லாரை கீரையையும், கொத்தமல்லி, புளி கரைசலையும் சேர்த்து அரைக்கவும்.

இஞ்சி, தயிர், உப்பு போன்றவைகளை அத்துடன் சேர்த்து அரைத்து கலந்து சாப்பிடலாம்.

ஆரோக்கிய பலன்:

இதில் கால்சியம், இரும்புசத்து நிறைந்துள்ளது. மூட்டு வலிக்கு சிறந்த நிவாரணியாகும். இந்த சட்னியை மாதம் இரண்டு அல்லது மூன்று முறை சாப்பிடலாம்.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News