லைஃப்ஸ்டைல்

வெயில் காலத்திற்கு குளிர்ச்சியான ஆம் பன்னா

Published On 2019-05-03 04:34 GMT   |   Update On 2019-05-03 04:34 GMT
வட இந்தியாவில், ‘ஆம் பன்னா’ என்று அழைக்கப்படும் இந்த மாங்காய் ஜூஸ், வெயில்காலத்திற்கு மிகவும் குளிர்ச்சியான, சத்தான பானம். இன்று இந்த ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:

பச்சை மாங்காய் - 6
சீரகத் தூள் - சுவைக்கேற்ப
உப்பு - சுவைக்கேற்ப
நாட்டுச் சர்க்கரை - சுவைக்கேற்ப
புதினா இலைகள் - சிறிதளவு
மிளகுத் தூள் - சுவைக்கேற்ப



செய்முறை:

மாங்காய்களை தண்ணீரில் வேக வைக்கவும். (இதற்கு பதில் தனல் அடுப்பில் மாங்காயைச் சுட்டெடுத்தால் முற்றிலும் மாறுபட்ட சுவை கிடைக்கும்). வெந்தவுடன் தோல் உரித்து, சதைப் பகுதியை மட்டும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

சீரகத் தூள், உப்பு, நாட்டுச் சக்கரை, புதினா இலைகள், மிளகுத் தூள் இவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ளுங்கள்.

அரைத்த விழுதை சுட்ட மாங்காயுடன் கலந்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, மிக்ஸியில் ஒரு தடவை ஓடவிடுங்கள்.

சுவையான ஆம் பன்னா ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News