லைஃப்ஸ்டைல்

சத்தான டிபன் குதிரைவாலி காரப்பொங்கல்

Published On 2019-04-10 04:36 GMT   |   Update On 2019-04-10 04:36 GMT
வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் சிறுதானியங்களை சேர்த்து கொள்வது நல்லது. இன்று குதிரைவாலி அரிசியில் பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

குதிரைவாலி அரிசி - 1 கப்,
பாசிப்பருப்பு - ¼ கப்,
தண்ணீர் - 2½ கப்,
உப்பு - தேவைக்கு,
இஞ்சி - சிறிய துண்டு
பச்சைமிளகாய் - 3,
சீரகம் - 1 டீஸ்பூன்,
மிளகு - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
எண்ணெய், நெய் - தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
முந்திரிப்பருப்பு - தேவைக்கேற்ப.



செய்முறை :

பாசிப்பருப்பை வெறும் கடாயில் போட்டு லேசாக வறுத்து கொள்ளவும்.

இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

தண்ணீரை கொதிக்க வைத்து அதில் 1 டீஸ்பூன் நெய் சேர்த்து அதனுடன் குதிரைவாலி அரிசி, பாசிப்பருப்பை சேர்த்து வேக விடவும். இரண்டும் வெந்ததும் உப்பு சேர்க்கவும். நன்கு வெந்து பொங்கல் பதம் வந்ததும் இறக்கி வைக்கவும்.

மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் மற்றும் எண்ணெயை ஊற்றி சூடானதும் சீரகம், மிளகு, இஞ்சி, முந்திரி, கறிவேப்பிலை, பச்சைமிளகாய் போட்டு தாளித்து பொங்கலில் சேர்த்து கிளறி இறக்கவும்.

சூப்பரான சத்தான குதிரைவாலி காரப்பொங்கல் ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News