லைஃப்ஸ்டைல்

சத்தான ஸ்நாக்ஸ் அத்திப்பழம் நட்ஸ் உருண்டை

Published On 2019-02-09 04:36 GMT   |   Update On 2019-02-09 04:36 GMT
குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் தினமும் உலர்ந்த பழங்களை எடுத்து கொள்வது நல்லது. இன்று உலர்ந்த பழங்களை வைத்து சத்தான உருண்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

உலர்ந்த அத்திப்பழம் - 20
உடைத்த முந்திரி, உடைத்த வால்நட், வெள்ளரி விதை - தலா கால் கப்
ரூட்டி ஃப்ரூட்டி - 50 கிராம்,
பேரீச்சம்பழம் - 15
தேன் - சிறிதளவு.



செய்முறை :

உலர்ந்த அத்திப்பழத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பேரீச்சம்பழத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

மிக்சியில் பேரீச்சம்பழம, அத்திப்பழத்தை போட்டு ஒரு சுற்று சுற்றி இறக்கவும். நைசாக அரைக்க கூடாது. ஒரு சுற்று சுற்றினால் போதுமானது.

அரைத்ததை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் உடைத்த முந்திரி, உடைத்த வால்நட், வெள்ளரி விதை, தேன், ரூட்டி ஃப்ரூட்டி சேர்த்து  நன்கு கலந்து கெட்டியாக உருண்டைகளாக வேண்டிய வடிவில் பிடிக்கவும்.

அத்திப்பழம் நட்ஸ் உருண்டை ரெடி.

மிகவும் சத்துமிக்க இந்த உருண்டையை, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News