லைஃப்ஸ்டைல்

குழந்தைகளை தத்து எடுப்பதற்கான வழிமுறைகள்

Published On 2019-05-15 08:46 GMT   |   Update On 2019-05-15 08:46 GMT
குழந்தைகள் தத்தெடுப்பு என்பது ஒரு நீண்ட கால நடைமுறையாகும். அதை மிகப் பொறுமையோடு செய்ய வேண்டும். குழந்தைகளை தத்தெடுப்பதற்கான அரசாங்கத்தின் வழிமுறைகளை பார்க்கலாம்.
குழந்தைகள் தத்தெடுப்பு என்பது ஒரு நீண்ட கால நடைமுறையாகும். அதை மிகப் பொறுமையோடு செய்ய வேண்டும். வளரப் போகும் குழந்தையின் பாதுகாப்புக்காக தான் இதில் கடுமையான விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனை விரும்பாதவர்கள் நாமக்கல் சம்பவம் போன்று குறுக்கு வழியில் செயல்படுகிறார்கள். அவர்களுக்கு சில அரசு ஊழியர்களும் துணை போகிறார்கள் என்பதுதான் பேரதிர்ச்சியாக உள்ளது.

குழந்தைகளை தத்தெடுப்பதற்கான அரசாங்கத்தின் வழிமுறைகள் பின்வருமாறு:-

* குழந்தை தேவைப்படுபவர் யாராக இருந்தாலும் இணையத்தின் வழியே மட்டுமே விண்ணப்பித்து பெற முடியும்.

* தம்பதியின் திருமண சான்றிதழ் தேவை.

* தம்பதியினர் இருவரின் வயது சான்றிதழ் தேவை.

* தம்பதியரில் யாருக்கேணும் 45 வயதுக்கு மேல் ஆகியிருக்குமானால் தத்தெடுக்கும் தகுதியில்லை.

* இனி தங்களுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்பதற்கான மருத்துவ சான்றிதழ் வழங்க வேண்டும்.

* வருமான சான்றிதழ் தேவை.

* சொத்து கண்டிப்பாக இருக்க வேண்டும்.

* 3 பேர் சிபாரிசு செய்ய வேண்டும்.

* தாய், தந்தைக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்துவிட்டால் அதன் பிறகு “குழந்தையை பொறுப்பெடுத்து வளர்க்க நாங்கள் தயார்” என வேறு ஒரு தம்பதி வாக்குறுதி தர வேண்டும். வாக்குறுதி கொடுக்கும் தம்பதியினருக்கும் சொத்து இருக்க வேண்டும்.

* இதில் ஏதேனும் ஒன்றை தர முடியாவிட்டாலும் அவர்களுக்கு குழந்தை கிடைக்க வாய்ப்பில்லை.
Tags:    

Similar News