பெரும்பாக்கம் ராஜசேகருக்கு அ.தி.மு.க.வில் ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளராக பதவி வழங்கப்பட்டுள்ளது. #ADMK
சென்னை:
அ.தி.மு.க.வில் கட்சிக்காக பாடுபட்ட முக்கிய பிரமுகர்களில் ஒருவர் பெரும்பாக்கம் ராஜசேகர். இவர் இதற்கு முன்பு மாவட்ட மாணவரணி செயலாளராகவும், பரங்கிமலை ஒன்றிய செயலாளராகவும், மாவட்ட அம்மா பேரவை செயலாளராகவும் பதவி வகித்தவர்.
ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியான பெரும்பாக்கம் ராஜசேகர் இடைத்தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களில் கழக வேட்பாளர்களுக்காக தீவிரமாக வாக்கு சேகரிப்பவர். கட்சிக் கூட்டங்களையும் பிரம்மாண்டமாக நடத்தி பெயர் பெற்றவர்.
கட்சியில் இவரது உழைப்புக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக கட்சி ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கும் பரிந்துரை செய்த பேரவை மாநில செயலாளர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மாவட்ட கழகச் செயலாளர்கள் சிட்லபாக்கம் ராஜேந்திரன், திருக்கழுக்குன்றம் ஆறுமுகம் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
பதவி கிடைத்ததும் ஜெயலலிதாவின் படத்துக்கு மலர் தூவி தனது பணிகளை துவங்கினார். #ADMK