ஆன்மிகம்
பெருமாள்கள் மேலவீதியில் உலா வந்ததையும், பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததையும் படத்தில் காணலாம்.

தஞ்சையில் 15 பெருமாள்கள் நவநீத சேவை

Published On 2019-05-27 05:22 GMT   |   Update On 2019-05-27 05:22 GMT
தஞ்சையில் 15 பெருமாள்கள் நவநீத சேவை விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம், ராமானுஜ தரிசன சபை சார்பில் 85-ம் ஆண்டு கருட சேவை விழா ஆழ்வார் மங்களாசாசனத்துடன் கடந்த 24-ந் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் 24 பெருமாள்கள் கருட சேவை விழா நடைபெற்றது. நேற்று 15 பெருமாள் கோவில்களில் வெண்ணெய்த்தாழி விழா என்கிற நவநீத சேவை விழா நேற்று நடந்தது.

இதைத்தொடர்ந்து வெண்ணாற்றங்கரை நீலமேக பெருமாள், நரசிம்ம பெருமாள், மணிகுன்ற பெருமாள், கல்யாண வெங்கடேச பெருமாள், மேலவீதி நவநீத கிருஷ்ணன், எல்லையம்மன் தெரு ஜனார்த்தன பெருமாள், கரந்தை யாதவ கண்ணன், கீழவீதி வரதராஜ பெருமாள், தெற்கு வீதி கலியுக வெங்கடேச பெருமாள், பள்ளியக்ரஹாரம் கோதண்டராமசாமி பெருமாள், மகர்நோம்புசாவடி நவநீத கிருஷ்ணன், பிரசன்ன வெங்கடேச பெருமாள், மேல அலங்கம் ரெங்கநாத பெருமாள், படித்துறை வெங்கடேச பெருமாள், கோட்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆகிய கோவில்களிலிருந்து பெருமாள்கள் வெண்ணெய்த்தாழி அலங்காரத்தில் புறப்பட்டு தஞ்சை கொடிமரத்து மூலைக்கு வந்தடைந்தது.

பின்னர் அங்கிருந்து 15 பெருமாள்களும் புறப்பட்டு கீழவீதி, தெற்குவீதி, மேலவீதி, வடக்கு வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று(திங்கட்கிழமை) விடையாற்றி விழா நடக்கிறது.
Tags:    

Similar News