ஆன்மிகம்

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் திருவிழா தேரோட்டம்

Published On 2019-05-24 09:44 GMT   |   Update On 2019-05-24 09:44 GMT
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பெரம்பலூர் மாவட் டம் சிறுவாச்சூரில் அமைந்துள்ளது மதுரகாளியம்மன் கோவில். தமிழகத்தில் உள்ள அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலின் தேர் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்தாண்டு திருவிழா கடந்த 7-ந்தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. 14-ந்தேதி மதுரகாளியம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

இதையடுத்து சந்தி மறித்தல், குடி அழைத்தல், சிவ வழிபாடு, பெருமாள் வழிபாடு, மாரியம்மன், அய்யனார் மற்றும் மலை வழிபாடுகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாணம் அம்பாளுக்கு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மதுரகாளியம்மன் பல்வேறு அலங்காரத்துடன் சுவாமியுடன் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

பூச்சொரிதல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து மதுரகாளியம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேச கங்கள் செய்யப்பட்டு சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைப்பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக நிலையை வந்தடைந்தது.

இன்று அம்மன் ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நாளை 25 -ந்தேதி அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்கள் திரு வீதி உலா வருதல் மற்றும் விடையாற்றி விழா நடைபெற உள்ளது. 26-ந் தேதி மூலஸ்தான வழிபாட்டுடன் சுவாமிமலை ஏறுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News