ஆன்மிகம்

வழிபாட்டு சடங்கில் இந்த தவறை செய்யாதீங்க

Published On 2019-05-24 05:43 GMT   |   Update On 2019-05-24 05:43 GMT
சில வழிபாட்டு சடங்கு செய்யும் போது சில விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அவை என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
* உருவச் சிதைவுள்ள பொருட்களை உபயோகப்படுத்தக் கூடாது. பின்னம் (சிதைவு) உள்ள விக்கிரகங்களை வைத்து வழிபடக் கூடாது. அப்படி வழிபட்டால், அதோடு அதே போன்ற நல்ல விக்கிரகம் ஒன்றையும் வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

* அட்சதை தூவும் பொழுது (திருமணவீட்டில்) உடையாத முழு அரிசியாக இருக்கவேண்டும்.

* கோவில் மணி, சங்கு, அடுப்பு, தாலிச்சரடு போன்றவை உடைந்தால் அதன் சக்தி இழந்து போய் விடும். எனவே அவற்றை உடனடியாக மாற்றிவிட வேண்டும்.

* துளசி இலைகளை கொத்துக் கொத்தாக வழிபாட்டிற்கு கொடுக்க வேண்டும். உதிர்த்துக் கொடுக்கக் கூடாது.

* சுமங்கலிப் பெண்களுக்கு விருந்து வைக்கும் பொழுது, வாழை இலை கிழிந்திருக்கக் கூடாது.

* சான்றோர்களுக்கு விருந்தளிக்கும் பொழுது, நுனி இலைபோட்டு பரிமாற வேண்டும்.

* சிரார்த்த சடங்கு, ருது சடங்கு, புனிதச் சடங்கு மற்றும் விரத நாட்களில், கிழிந்த ஆடை, பழைய ஆடைகளை அணியக்கூடாது.
Tags:    

Similar News