ஆன்மிகம்

கும்பகோணத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் திருவிழா

Published On 2019-05-18 03:38 GMT   |   Update On 2019-05-18 03:38 GMT
கும்பகோணம் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் பாலாபிஷேக திருவிழா யொட்டி திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை அடைந்தனர்.
கும்பகோணம் ஏ.ஆர்.ஆர். ரோட்டில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று பாலாபிஷேக திருவிழா நடந்தது. இதையொட்டி கும்பகோணம் அரசலாற்றங் கரையில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை அடைந்தனர்.

மதியம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். மாலை அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடந்தது.

பின்னர் மாலை மாவிளக்கு பூஜையும், அம்மன் சிம்ம வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
Tags:    

Similar News