ஆன்மிகம்

நெல்லையப்பர் கோவிலில் வருசாபிஷேகம்

Published On 2019-05-15 05:57 GMT   |   Update On 2019-05-15 05:57 GMT
தென் தமிழகத்தில் புகழ் பெற்ற நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் வருசாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி சுவாமி, அம்பாளுக்கு கும்பம் வைத்து சிறப்பு ஹோமம் நடைபெற்றது.
தென் தமிழகத்தில் புகழ் பெற்ற நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவில் நெல்லை டவுனில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருசாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை சுவாமி, அம்பாளுக்கு கும்பம் வைத்து சிறப்பு ஹோமம் நடைபெற்றது.

காலை 10.30 மணிக்கு சுவாமி, அம்பாள், விமான கலசங்கள், பரிவார மூர்த்திகளுக்கும் புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள், பஞ்ச மூர்த்திகள் ரதவீதி உலா வருதல் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
Tags:    

Similar News