ஆன்மிகம்

திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள் கோவிலில் ராமருக்கு பட்டாபிஷேகம்

Published On 2019-04-25 07:55 GMT   |   Update On 2019-04-25 07:55 GMT
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள வரதராஜபெருமாள் கோவிலில் ராமர் பட்டாபிஷேக விழா நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள வரதராஜபெருமாள் கோவிலில் ராமநவமி விழா கடந்த 13-ந்தேதி தொடங்கியது. விழாவையொட்டி தினமும் பெருமாளுக்கும், ராமருக்கும் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் மகா தீபாராதனையும், இரவில் சாமி வீதி உலாவும், ராமாயண பக்தி சொற்பொழிவும் நடைபெற்று வந்தது,

விழாவின் சிகர நிகழ்ச்சியான ராமர் பட்டாபிஷேக விழா நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்றது. விழாவில் ராமருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கிரீடம் அணிவிக்கப்பட்டு, பட்டாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது. மேலும் ராமருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் மகாதீபாராதனையும் நடந்தது. பின்னர் சாமி வீதி உலா நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News