ஆன்மிகம்
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் வைக்க பானைகளை வாங்கிச் செல்லும் பெண் பக்தர்கள்.

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் நாளை பொங்கல் திருவிழா

Published On 2019-02-19 08:10 GMT   |   Update On 2019-02-19 08:10 GMT
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் நாளை பொங்கல் திருவிழா நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பார்கள் என்பதால் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

திருவனந்தபுரம், பிப். 19-

திருவனந்தபுரம் ஆற்றுக் கால் பகவதி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில் களில் ஒன்றாக திகழ்கிறது.

இந்த கோவிலில் ஆண்டு தோறும் பொங்காலை திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பொங்காலை திருவிழா கடந்த 12-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளை நடிகர் மம்முட்டி தொடங்கி வைத்தார். தொடர்ந்து விழா நடந்து வருகிறது.

கேரளா மட்டுமின்றி குமரி மாவட்டம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதி களை சேர்ந்த பக்தர்கள் கோவிலுக்கு சென்று அம்மனை தரிசனம் செய் வதால் அங்கு கூட்டம் அலை மோதுகிறது. பல மணிநேரம் காத்திருந்த பிறகே பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்ய முடிகிறது.

இங்கு நடைபெறும் பொங்காலை திருவிழாவில் பெண்கள் மட்டுமே பங்கேற்று பொங்கல் வைத்து அம்மனை வழிபடுவதால் இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப் படுகிறது. பிரசித்திபெற்ற பொங்காலை திருவிழா நாளை (20-ந்தேதி) நடை பெறுகிறது.

நாளை காலை 10.20 மணிக்கு கோவில் வளாகத் தில் உள்ள அடுப்பில் தந்திரி பரமேஸ்வரன் வாசுதேவன், மேல்சாந்தி விஷ்ணு நம்பூதிரி ஆகியோர் தீ பற்றவைப்பார்கள். அதை தொடர்ந்து கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் லட்சக் கணக்கான பெண்கள் ஒரே நேரத்தில் பொங்கல் வைத்து அம்மனை வழிபடுவார்கள்.

இதையொட்டி கோவில் வளாகம் மற்றும் சுற்றுப் பகுதியில் இப்போதே பக்தர் கள் இடம்பிடிக்க தொடங்கி விட்டனர். பொங்கல் அடுப்பு, பானை மற்றும் பூஜை பொருட்களுடன் அவர்கள் பொங்காலைக்கு தயாராக உள்ளனர். ஏற்கனவே இங்கு நடைபெற்று உள்ள பொங் காலை திருவிழா கின்னஸ் சாதனை புத்த கத்தில் இடம் பெற்று உள்ளது. எனவே நாளை பொங்காலை திருவிழாவில் பல லட்சம் பெண் பக்தர்கள் திரள்வார்கள் என்பதால் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருவனந் தபுரத்திற்கு சிறப்பு ரெயில், பஸ்கள் விடவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. * * * ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் வைக்க பானைகளை வாங்கிச் செல்லும் பெண் பக்தர்கள்.

Tags:    

Similar News