ஆன்மிகம்

ஆற்றங்கரை உற்சவம்

Published On 2019-01-30 08:34 GMT   |   Update On 2019-01-30 08:34 GMT
பட்டுக்கோட்டை அருகே உள்ள பரகலக்கோட்டை பொது ஆவுடையார் கோவிலில் திங்கட்கிழமை மட்டும் இரவு 12 மணிக்கு பார் வேட்டை உற்சவ வழிபாடு நடைபெறுகிறது.
பொங்கல் திருநாளுக்கு மறுதினம் காஞ்சி அருகே உள்ள சீவரத்தில் பார் வேட்டை உற்சவம் நடைபெறும். அந்த உற்சவத்திற்காக ஆற்றங்கரைக்கு காஞ்சி வரதர் வருகை தருவார். அங்கு அவருடன் பழைய சீவரம் லட்சுமி நரசிம்மர், காவாத்தண்டலம் கரிய மாணிக்கப் பெருமாள், காலவாக்கம் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் மற்றும் திருமுக்கூடல் அப்பன் வெங்கடேசப் பெருமாள் ஆகியோர் ஒரு சேர வருவார்கள்.

பார்த்திபனூர் அருகே உள்ள மேலப்பெருங்கரை சிவபெருமான் ஆலயத்தில், எட்டு யானைத் தலை சிலைகள் இருக்கின்றன. ஆண்டு தோறும் தைப் பொங்கல் திருநாள் அன்று, இந்த யானை சிலைகளுக்கு முன்பாக கரும்புகளை வைத்து பொங்கலிட்டு பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள்.

பட்டுக்கோட்டை அருகே உள்ள பரகலக்கோட்டை பொது ஆவுடையார் கோவிலில் திங்கட்கிழமை மட்டும் இரவு 12 மணிக்கு வழிபாடு நடைபெறுகிறது. மற்ற நாட்களில் பூஜைகள் செய்யப்படுவதில்லை. தைப் பொங்கல் திருநாளில் மட்டும் இந்த ஆலயம் பகல் முழுவதும் வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில் பொங்கல் திருநாள் அன்று, சந்திரசேகர சுவாமி திருவீதி உலா வருவார். மறுநாள் மாட்டுப் பொங்கல் அன்று, கற்பகாம்பாள் கன்னி உற்சவம் நடைபெறும்.

வேலூர் மாவட்டம் துத்திப்பட்டு பகுதியில் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. காணும் பொங்கல் அன்று இத்தல இறைவன் நிமிஷாசல மலையை சுற்றி வலம் வருவார்.

மதுராவில் இந்திரனுக்கு மரியாதை கொடுக்கும் விழாவாக ‘ஹடாகா’ என்ற பெயரில் பொங்கல் விழாவை கொண்டாடுகின்றனர். இந்திரனின் வாகனமான ஐராவதத்தை இந்த விழாவின் போது கவுரவிக்கின்றனர். யானையின் உருவத்தை எல்லா இடங்களிலும் வரைந்து வைத்து, அதற்கு மரியாதை செலுத்தப்படுகிறது.
Tags:    

Similar News