ஆன்மிகம்

பாலூர் பத்ரேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா: திருவிளக்கு வழிபாடு நாளை தொடங்குகிறது

Published On 2019-01-10 07:56 GMT   |   Update On 2019-01-10 07:56 GMT
கருங்கல் அருகே உள்ள பாலூர் ஸ்ரீபத்ரேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா மற்றும் 702 திருவிளக்கு வழிபாடு, இந்து சமய மாநாடு நாளை தொடங்கி 5 நாட்கள் நடக்கிறது.
கருங்கல் அருகே உள்ள பாலூர் ஸ்ரீபத்ரேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா மற்றும் 702 திருவிளக்கு வழிபாடு, இந்து சமய மாநாடு நாளை தொடங்கி 5 நாட்கள் நடக்கிறது.

முதல் நாள் மகா கணபதி ஹோமம், அபிஷேகம், அர்ச்சனை, உச்ச பூஜை, தீபாராதனை, அன்னதானம், சிறப்பு பூஜை, இந்து சமய மாநாடு, பரிசு வழங்கல், கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. 2- நாள் அபிஷேகம், அர்ச்சனை, பண்பாட்டு மற்றும் விளையாட்டு போட்டிகள், உச்ச பூஜை, தீபாராதனை, அன்னதானம், சிறப்பு பூஜை, இன்னிசை விருந்து நடக்கிறது.

3-ம் நாள் இரவு 702 திருவிளக்கு பூஜையும், 4-ம் நாள் மாலை நாதஸ்வர கச்சேரி, அம்மன் பவனி, வில்லிசை, அலங்கார மகுட இசையும், 5-ம் நாள் கும்ப ஊர்வலம், பொங்கல் வழிபாடு, மஞ்சள் நீராட்டு, பிரசாதம் வழங்குதல் நடக்கிறது.

விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை சிறப்பு பூஜையும், அர்ச்சனையும், தீபாராதனையும், மதியம் மற்றும் இரவு அன்னதானமும் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழு தலைவர் சுடர்சிங், செயலாளர் பால்துரை ஆகியோர் தலைமையில் ஊர் மக்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News