ஆன்மிகம்

இறைவனுக்கு செய்யும் அபிஷேகமும்.. பலன்களும்..

Published On 2018-09-19 08:16 GMT   |   Update On 2018-09-19 08:16 GMT
இறைவனுக்கு விருப்பமான பொருட்களால் அபிஷேகம் செய்தால் நம் வேண்டுதல்கள் நிறைவேறும். அந்த வகையில் இறைவனுக்கு எந்த பொருளால் வழிபாடு செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
இறைவனுக்கு விருப்பமான பொருட்களால் அபிஷேகம் செய்தால் நம் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும். அந்த வகையில் இறைவனுக்கு எந்ததெந்த  பொருளால் வழிபாடு செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

சந்தனாதி தைலம் - இன்பம்
அரிசி மாவு - கடன் விலகும்
மஞ்சள் தூள் - மங்கலம்
நெல்லிப்பொடி - பிணிநீக்கம்

திரவியம் பொடி - இகபர சுகம்
ரசபஞ்சாமிர்தம் - விவேகம்
பழபஞ்சாமிர்தம் - முக்தி
பால் - ஆயுள் விருத்தி

பஞ்சகவ்யம் - சுத்தம், சகல தோஷ நிவர்த்தி
இளவெந்நீர் - முக்தி
தேன் - சுகம், சங்கீத குரல்வளம்
இளநீர் - ராஜயோகம் கொடுக்கும்

சர்க்கரைச்சாறு - பகைவரை வெல்லலாம்
கரும்புச்சாறு - ஆரோக்கியம்
பழச்சாறு - மகிழ்ச்சி தரும்
எலுமிச்சம் பழச்சாறு - எமபயம் போக்கும்

நாரத்தம் பழச்சாறு - மந்திர சித்தி கொடுக்கும்
பழச்சாறு - சோகம் போக்கும்
மாதுளம் பழச்சாறு - பகைமை அகற்றும்
அன்னாபிஷேகம் - விளைநிலங்கள், நன்செய்தரும்



வில்வங் கலந்தநீர் ( வில்வோதகம்) - மகப்பேறு தரும்
தர்ப்பைப்புல் கலந்த நீர் ( குரோதகம்) - ஞானம் தரும்
பன்னீர் - குளிர்ச்சி தரும்
விபூதி ( திருநீறு) - சகல ஐஸ்வர்யம் தரும்

தங்கம் கலந்தநீர்
( ஸ்வர்ணோதகம்) - சகல சவுபாக்கியம் கிட்டும்
ரத்னம் கலந்தநீர்
( ரத்னோதகம்) - சகல சவுபாக்கியம் கிட்டும்

சந்தனம் - அரசாட்சி, பெருஞ் செல்வம் கிட்டும்
கோரசணை - சகல ஆரோக்கியம்
ஜவ்வாது - ஜன வசியம்
புனுகு - புகழ் கிட்டும்

பச்சைக் கற்பூரம் - தெய்வ ஆகர்ஷனம்
குங்குமப்பூ - இஷ்ட சித்தி
தயிர் - குழந்தைச் செல்வம் கிட்டும்
சங்காபிஷேகம் - சகல காரிய சித்தி
கலசாபிஷேகம் - இறையருள்

Tags:    

Similar News