திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுடன் இணைந்த அதன் உபகோவிலான வெயிலுகந்த அம்மன் கோவில் ஆவணித் திருவிழா நாளை (சனிக்கிழமை) காலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
எட்டாம் திருவிழா அன்று மாலை 6மணிக்கு தெற்கு ரதவீதியில் உள்ள ஆதித்த நாடார்கள் மண்டகப்படியில் அம்மனுக்கு அபிசேகம் அலங்காரமாகி குதிரை வாகனத்தில் பவனி வந்து பந்தல் மண்டபத்தில் சேர்க்கை ஒளிவழிபாடு பின்பு கோவில் சேர்தல் நடைபெறுகிறது.
10ம் திருவிழாவான வருகிற 27-ந்தேதி (திங்கட் கிழமை) காலை 6மணிக்கு மேல் 6.30 மணிக்குள் சிம்ம லக்கனத்தில் தேரோட்டம் நடைபெறுகிறது, அன்று மாலை 4மணிக்கு சுப்பிர மணிய சுவாமி கோவில் நாழிக்கிணறு மண்டகப் படியில் தீர்த்தவாரி நடை பெறுகிறது. இரவு 8மணிக்கு அம்மன் சண்முக விலாசத்தில் அலங்கார சப்பரத்தில் எழுந்தருளி சண்முகருக்கு எதிர் சேவை ஒளிவழிபாடு ஆகி எட்டு வீதிகளிலும் பவனி வந்து சவுக்கையில் சேர்க்கை ஒளிவழிபாடு பின்பு கோவில் சேர்தல் தொடர்ந்து கொடியிறக்கம் நடைபெறுகிறது
விழாவில் ஒவ்வொரு நாளும் இரவு 7மணிக்கு சமய சொற்பொழிவு நடை பெறுகிறது. விழா ஏற்பாடு களை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் பணியாளர் கள் செய்து வருகின்றனர்.