ஆன்மிகம்

மார்கழி பூஜை : திருப்பாவை பாடல் - 16

Published On 2017-12-31 02:54 GMT   |   Update On 2017-12-31 02:54 GMT
மார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
கோவில்காப் பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில்காப் பானே! மணிக்கதவம் தாள் திறவாய்
ஆயர்சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்

நாங்கள் போற்றி வழிபடும் இறைவன், நந்த கோபாலனின் திருக்கோவிலை காக்கின்ற காவலனே! இறைவன் புகழ் எட்டு திக்கும் பரப்பும் வண்ணம், உயரத்தில் பறக்கின்ற, கொடி விளங்கும், மாவிலை தோரணங்கள் கட்டப்பட்ட வாயிலைக் காப்பவனே! மணிகள் பதிக்கப்பட்ட திருக்கதவை திறப்பாயாக! 

ஆயர்குடி சிறுமிகளுக்கு விரும்பி வேண்டி நிறைந்த செல்வங்களை கொடுப்பதாக, கிருஷ்ணன் நேற்றைய தினம் வாக்கு அளித்துள்ளான். அவனை துயில் எழுந்தருளுமாறு கூறி திருப்பள்ளியெழுச்சி பாட வந்துள்ளோம் நாங்கள். அதனால் மேன்மை பொருந்திய திருக்கதவினைத்திறப்பாயாக! 

திருக்கோவில் வாயில் காப்போனே, கதவினை திறந்துவிட்டால் நாங்கள் உள்ளே சென்று இறைவனைப்பாடி, துயில் எழுப்பி, அவன் வழங்கும் செல்வத்தை பெற்று இவ்வுலகில் சிறப்புடன் வாழ்வோம்.

Tags:    

Similar News