ஆன்மிகம்

ராகு - கேது பரிகார திருத்தலங்கள்

Published On 2019-03-14 02:21 GMT   |   Update On 2019-03-14 02:21 GMT
திருமண தடை, குழந்தை பேறு வழக்கும் ராகு - கேது பரிகார தலங்கள்ல தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் உள்ளன. அந்த தலங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
* ஆதிசேஷன் பூஜித்து அருள் பெற்ற தலம் சென்னை திருவொற்றியூர். இங்குள்ள ஸ்ரீவடிவுடையம்மன் உடனுறை ஸ்ரீபடம்பக்கநாதர் மற்றும் ஸ்ரீமானிக்கதியாகேஸ்வரரை வணங்குங்கள். ராகு-கேதுவால் உண்டான தோஷம் விலகும்.

* கும்பகோணம்-மயிலாடுதுறை இடையே உள்ள கதிராமங்கலம் நவமி திதி அன்று இந்த தலத்திற்கு சென்று காவிரியில் நீராடி இங்குள்ள வனதுர்க்கை அம்மனை வழிபடுங்கள். ராகு பகவானால் உண்டான தீமை விலகும்.

* சிவகங்கை அருகில் உள்ள காளையார் கோவிலுக்கு சென்று கொண் டின்ய மகரிஷி மற்றும் நாகங் களின் அரசன் வழிபட்ட ஸ்ரீமகமாயி அம்மன், ஸ்ரீகானக்காளையீஸ்வரரை வழிபடுங்கள். ராகு மற்றும் கேதுவால் உண்டான தீமைகள் விலகும்.

* காஞ்சீபுரம்-ஸ்ரீசித்ரகுப்தர் ஆலயம் சென்று அவரை வழிபடுவதுடன் கொள்ளு, உளுந்து மற்றும் பிரவுன் நிற துணிகளை தானம் செய்யுங்கள். பசுவுக்கு ஏதேனும் உண்ண கொடுக்கவும்.

* ஸ்ரீவாஞ்சியம்: நன்னிலம்-குடவாசல் பேருந்து சாலையில் உள்ள வாஞ்சி நாதேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நாகதீர்த்தத்தில் நாக தோஷத்தால் நீண்ட நாட்கள் திருமணம் ஆகாதவர்கள் நீராடி, நாகநாத சுவாமியையும், நாக ராஜரையும் பிரார்த்தனை செய்து வேண்டிக் கொண்டால் விரைவில் திருமணம் நடக்கும்.

* விருத்தாசலத்திற்கு தெற்கே சுமார் 7 கி.மீ. தொலைவில் நாகேந்திரபட்டினம் எனும் ஊரில் நீலமலர் கண்ணியம்மை உடனுறை நீலகண்ட நாயகேஸ்வரை வணங்குங்கள். ராகு மற்றும் கேதுவினால் உண்டான தோஷங்கள் விலகும்.

* திருப்பத்தூர்-திண்டுக்கல் சாலையில் சிங்கம் புனரிக்கு அருகில் உள்ள தலம் பிரான்மலை. இங்கு நாகராஜன் வழிபட்ட குயிலமுதநாயகி கொடுங்குன்றீசரை, தேன்-தினைமாவு கலந்து படைத்து வழிபடவும்.

* சென்னை, மைலாப்பூரில் கோவில் கொண்டுள்ள முண்டகக்கன்னி அம்மனை மனம் உருக வணங்கி வழிபட்டு வர ராகு-கேதுவினால் ஏற்பட்ட தடைகள் விலகும்.

* ஆதிசேஷன் வழிபட்ட திருநாகேஸ்வரம் சென்று சூரிய புஷ்கரணியில் நீராடி ஸ்ரீசண்பகா தண்யேஸ்வரர், ஸ்ரீகிரிஜகுசாம்பிகையை நெய்தீபம் ஏற்றி வழிபடுங்கள் நினைத்தது நிறைவேறும்.

* ஸ்ரீகாளஹஸ்தி சென்று அங்கு கோவில் கொண்டிருக்கும் அருள்மிகு ஞானபூங்கோதையம்மை உடனுறை அருள்மிகு காளஸ்தீஸ்வரரை வணங்கி வழிபட்டு வர நிம்மதி கிடைக்கும்.

* திருச்சி சென்று இந்திரனும் நாககன்னியர்களும் வணங்கி வழிபட்ட மட்டுவார் குழலம்மை உடனுறை தாயுமானவரை வணங்கி வாருங்கள். உங்கள் வாழ்வில் சுபீட்சம் காணுவீர்.

* சர்ப்பதோஷ முள்ளவர் கள் பாம்பு புற்றிற்கு மஞ்சள் பூசி குங்கும பொட்டு வைத்து எலுமிச்சையை புற்றின் மீது வைத்து புற்றினுள் பால்விட்டு மூன்று முறை வலம் வர வேண்டும். நாகபஞ்சமி அன்று மட்டும் 9 முறை வலம் வர வேண்டும். குடும்பநலம், மகப்பேறு, சிரமமில்லாத பிரசவம் உண்டாகும். ராகு-கேது தசை நடப்பில் உள்ளவர்கள் நோய் நீங்க இந்த வழிபாடு செய்ய வேண்டும்.
Tags:    

Similar News