ஆன்மிகம்

நன்மை தரும் புவனேஸ்வரி ஸ்தோத்திரம்

Published On 2019-03-28 09:15 GMT   |   Update On 2019-03-28 09:15 GMT
புவனங்கள் அனைத்தையும் படைத்து காத்தருளும் அன்னை புவனேஸ்வரி தேவிக்குரிய இம்மந்திரத்தை துதிப்பதால் நன்மைகள் பல ஏற்படும்.
பூரணி யோக புவனேஸ்வரி கதி நீயே
அம்மா நாரணி ஜீவத் தாரணியே சிவ நாயகியே
மோக்ஷதாயகியே அரணருளாகவே
ஐந்தொழில் புரிந்திடும் ஆதிபராசக்தி நீயே
அம்மா வரதாயகி சித்தகௌரி
மனோன்மணி வாசாமா கோசரி நீயே அம்மா
மஹேஸ்வரி தாயே ஜெய மங்களம்,
சுப மங்களம் ஸர்வ சைதன்யரூபாம்
தாம் ஆத்யாம் சக்திம் ச தீமஹி ஹ்ரீங்கார
ரூபிணீம் தேவீம் தியோ யோந ப்ரசோதயாத்

புவனம் எனும் மனிதர்கள் வாழும் பூமி உட்பட அண்ட சரசாரங்களை படைத்து காத்தருளும் தேவி அன்னை புவனேஸ்வரி. அவளுக்குரிய இந்த ஸ்தோத்திரத்தை தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் துதிப்பது நல்லது. தேவி வழிபாட்டிற்குரிய செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை காலை வேளையில் அம்பாள் படத்திற்கு தீபம் ஏற்றி, தூபங்கள் காட்டி 27 முறை அல்லது 108 முறை துதிப்பதால் உங்களுக்கு வறுமை நிலை உண்டாகாது. தன, தானிய லாபங்கள் ஏற்படும். மிகுந்த தைரியமான மனநிலை உண்டாகும். குடும்பத்தில் நிம்மதியான நிலை ஏற்படும்.
Tags:    

Similar News