ஆன்மிகம்

கிரக தோஷங்கள் நீங்க இதை துதியுங்கள்

Published On 2019-03-15 05:48 GMT   |   Update On 2019-03-15 05:48 GMT
இந்த துதியை தினமும் காலை, மாலை என நேரம் கிடைக்கும் போதெல்லாம் 27 முறை முதல் 108 முறை வரை துதித்து வந்தால் உங்களை பீடித்திருக்கும் துஷ்ட சக்திகள், கிரக தோஷங்கள் நீங்கும்.
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே
ஒன்றைத் தாவி அஞ்சிலே ஒன்றாறாக
ஆரியர்க்காக ஏகி அஞ்சிலே
ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார்
ஊரில்அஞ்சிலே ஒன்று வைத்தான்
வன் நம்மை அளித்துக் காப்பான்

வானர தலைவன் வீர கேசரி அஞ்சனா தேவியின் மைந்தனான அனுமனின் புகழ் பாடும் துதி இது. இந்த துதியை தினமும் காலை, மாலை என நேரம் கிடைக்கும் போதெல்லாம் 27 முறை முதல் 108 முறை வரை துதிப்பது நல்லது. செவ்வாய், சனிக்கிழமைகளில் பெருமாள் கோயிலுக்கு சென்று அனுமன் சந்நிதியில் அனுமனுக்கு தீபம் ஏற்றி இந்த துதியினை படித்து வந்தால் உங்களை பீடித்திருக்கும் துஷ்ட சக்திகள், கிரக தோஷங்கள் நீங்கும். தம்பதிகள் ஒற்றுமை மேலோங்கும். தைரியம், மனஉறுதி ஏற்படும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியத்தை அருள்வார் அனுமன்.

Tags:    

Similar News