ஆன்மிகம்

நோய் தீர்க்கும் கருட தியான மந்திரம்

Published On 2019-01-19 07:29 GMT   |   Update On 2019-01-19 07:29 GMT
இத்துதியை நோயுற்றவர்களோ அல்லது அவர்கள் சார்பில் யாராவது ஒருவர் 1008 முறை விபூதியில் ஜபம் செய்து அதை தினமும் பூசிக்கொண்டால் நோய்கள் படிப்படியாக விலகும்.
அம்ருத கலச ஹஸ்தம் காந்தி ஸம்பூர்ணதேஹம்
ஸகல விபுதவந்த்யம் வேத சாஸ்த்ரைரசிந்த்யம்
விவித ஸுலப பக்ஷை: தூய மானாண்ட கோநம்
ஸகல விஷவிநாஸனம் சிந்தயேத் பக்ஷிராஜம்.
க்ஷிப ஓம் ஸ்வாஹா:

பொதுப் பொருள்:

அம்ருத கலசத்தை கையில் ஏந்தியவர். தேக காந்தி மிக்கவர். அனைத்து தேவதேவியர்களாலும் வணங்கப்படுபவர். இவருடைய பெருமையை யாராலும் விவரிக்க இயலாது. இவரது இறக்கை காற்று அண்டங்களை எல்லாம் நடுங்கச்செய்யும். இவரை உபாசித்தால் பாம்பு விஷம் நீங்கும். சகல விஷ வியாதிகளும் விலகும். பக்ஷிராஜரான கருடபகவானை நான் சிந்தையில் நிறுத்தி ஆராதிக்கிறேன்.
Tags:    

Similar News