ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள் (12.9.2017 முதல் 18.9.2017 வரை)

Published On 2017-09-12 02:31 GMT   |   Update On 2017-09-12 02:31 GMT
12.9.2017 முதல் 18.9.2017 வரை நடக்க உள்ள முக்கிய ஆன்மிக நிகழ்வுகளின் தொகுப்பை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
12-ந்தேதி (செவ்வாய்) :

* சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு கண்டருளல்.
* கீழ்திருப்பதி பார்த்த சாரதி பெருமாளுக்கு திருமஞ்சன சேவை.
* குரங்கணி முத்து மாலையம்மன் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.

13-ந்தேதி (புதன்) :

* வைகானச ஸ்ரீ ஜெயந்தி.
* மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி கோவிலில் உற்சவம் ஆரம்பம்.
* மேல்நோக்கு நாள்.

14-ந்தேதி (வியாழன்) :

* மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி சேஷ வாகனத்தில் உறியடி உற்சவம்.
* திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
* சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* மேல்நோக்கு நாள்.

15-ந்தேதி (வெள்ளி) :

* முகூர்த்த நாள்.
* மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி காலையில் ஊஞ்சலில் வீணை மோகினி அலங்காரம்.
* பத்ராச்சலம் ராமபிரான் புறப்பாடு.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை.
* திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு கண்டருளல்.
* சமநோக்கு நாள்.



16-ந்தேதி (சனி) :

* சர்வ ஏகாதசி.
* ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை.
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
* மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி கன்றால் விளா எறிந்த லீலை, சேஷ வாகனத்தில் நாராயணர் திருக்கோலமாய் காட்சியருளல்.
* மேல்நோக்கு நாள்.

17-ந்தேதி (ஞாயிறு) :

* பிரதோஷம்.
* மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி ரங்கநாதர் திருக்கோலமாய் காட்சியளித்து, மாலை வெண்ணெய் தாழி சேவை, இரவு கருட வாகனத்தில் ராஜாங்க அலங்கார சேவை.
* திருப்பதி கோவிந்த பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.
* சகல சிவன் கோவில் களிலும் இன்று மாலை நந்தீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை.
* கீழ்நோக்கு நாள்.

18-ந்தேதி (திங்கள்) :

* மாத சிவராத்திரி.
* மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி, ராமாவதார காட்சி. மாலை தவழ்ந்த கண்ணன் திருக்கோலமாய் காட்சியளித்தல்.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
* சகல சிவன் கோவில் களிலும் சிவபெருமானை வழிபடுவது நன்று.
* கீழ்நோக்கு நாள்.
Tags:    

Similar News