ஆன்மிகம்

மகான்களுக்கு விரதம் இருக்க உகந்த வியாழக்கிழமை

Published On 2019-01-24 08:03 GMT   |   Update On 2019-01-24 08:03 GMT
வியாழக்கிழமை குருவுக்கு உகந்த நாள் என்பதால் அன்றைய தினத்தில் மகான்களுக்கு விரதம் இருந்து அவர்களை பூஜிப்பது வாழ்வில் பல்வேறு நன்மைகளை தரும்.
வியாழக்கிழமை குருவுக்கு உகந்த நாள் என்பதால் அன்றைய தினத்தில் மகான்களுக்கு விரதம் இருந்து பூஜிப்பது சிறந்த விடயமாகும். குருக்கள் மக்களை நல்வழிப்படுத்தி இறைரீதியான பரிகாரங்களை உபதேசிப்பதால் மகான்களை குருவாக நினைத்து வியாழக்கிழமையில் இந்த விரங்களை அனுஷ்டிக்கின்றோம்.

மேலும் இந்த விரத அனுஷ்டிப்பின் போது மௌனமாக தியானிப்பதன் மூலம் மனதில் உள்ள கோரிக்கைகளை மகானின் பதம் சமர்ப்பிக்கலாம். சில இஸ்லாமிய தர்ஹாக்களில் வியாழக்கிழமை மிக விசேட தினமாக அனுஷ்டிக்கப்படுவதற்கு காரணம், அந்த தர்ஹாவில் ஒரு இஸ்லாமிய மகான் நிச்சயமாக அடங்கி இருப்பார் என்பது ஆகும்.

மேலும் எமது மனதில் எந்த ஒரு மகானுக்கோ அல்லது சித்தர்களுக்கோ முன்னுரிமை இருந்தால் அவர்களை நினைத்து வியாழக்கிழமைகளில் பூஜப்பது, விரதம் இருப்பது சிறந்த பலனைத் தரும். 
Tags:    

Similar News