ஆன்மிகம்

தர்காவில் சந்தனம் பூசும் விழா

Published On 2019-01-23 03:19 GMT   |   Update On 2019-01-23 03:19 GMT
திருச்சி மாவட்டம் சின்னசூரியூரில் உள்ள சையத் ரஹ்மானி பாபா கலந்தர் தர்காவில் சந்தனம் பூசும் விழா நடைபெற்றது. இதில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி மாவட்டம் சின்னசூரியூரில் உள்ள சையத் ரஹ்மானி பாபா கலந்தர் தர்காவில் சந்தனம் பூசும் விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு கடந்த 19-ந் தேதி தர்காவில் உரூஸ் பாத்திகாவும், தொடர்ந்து இஸ்லாமிய இன்னிசை நிகழ்ச்சியும் நடந்தது.

மறுநாள் திருச்சி ஹஜ்ரத் தப்லே ஆலம் பாதுஷா தர்காவில் இருந்து நிர்வாக அறங்காவலர் ஹாஜா மொய்தீன் தலைமையில் ஜமாத்தார்கள் ஊர்வலமாக சின்னசூரியூருக்கு வந்தனர். இதைத்தொடர்ந்து தர்காவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில் திருச்சி, மைசூரு, பெங்களூரு, கோலார், சின்னசூரியூர், மாத்தூர் உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களை சேர்ந்த மதபோதகர்கள், குருமார்கள், ஊர்முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பீர்பாபா சையத் நயீம் கலந்தர் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News