ஆன்மிகம்

கீழக்கரை தர்காவில் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Published On 2019-01-09 05:42 GMT   |   Update On 2019-01-09 05:42 GMT
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அல் குத்பு மகான் செய்யது முகம்மது அப்பா, கீது ஒலியுல்லா பாதுஷா நாயகத்தின் 844-வது ஆண்டு கந்தூரி விழாவை முன்னிட்டு கொடி ஏற்றப்பட்டு மவுலீது (புகழ்மாலை) ஓதப்பட்டு நேர்ச்சி வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அல் குத்பு மகான் செய்யது முகம்மது அப்பா, கீது ஒலியுல்லா பாதுஷா நாயகத்தின் 844-வது ஆண்டு கந்தூரி விழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கொடி ஏற்றப்பட்டு மவுலீது (புகழ்மாலை) ஓதப்பட்டு நேர்ச்சி வழங்கப்பட்டது.

உலக மக்களின் ஒற்றுமை மற்றும் அமைதிக்காக மாவட்ட அரசு காஜி சலாஹீதீன் ஆலிம் சிறப்பு பிரார்த்தனை செய்தார்.

தொடர்ந்து 14 நாட்களுக்கு தர்கா மண்ட பத்தில் தினந்தோறும் இரவு மவுலீது ஓதப்பட்டு நேர்ச்சி வழங்கப்படும். வருயீஜீஷ் 19-ந் தேதி இரவு 12 மணிக்கு சந்தனம் பூசும் விழா நடைபெறும். தொடர்ந்து பிப்ரவரி 5-ந் தேதி மாலை 5.30 மணியளவில் கொடி இறக்கப்பட்டு ஆயிரக்கணக் கானவர்களுக்கு நெய் சோறு வழங்கப்படும்.

தர்ஹா நிர்வாகிகள் சகாப்தீன், ஹபீப் முகமது தம்பி மற்றும் உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மக்பூல் சுல்தான், ஜலாலுதீன், ஜகுபர், முத்துவேல், அபூபக்கர் சித்தீக், அடுமை உள்ளிட்டவர்கள் செய்து வருகின்றனர். கொடியேற்று விழாவில் அனைத்து சமுதாயத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News