ஆன்மிகம்

சந்தனக்கூடு கொடிமர விழா

Published On 2018-11-28 02:44 GMT   |   Update On 2018-11-28 02:44 GMT
அலங்காநல்லூர் அருகே அய்யூர் கிராமத்தில் அரபு மஸ்தான் பள்ளிவாசல் உள்ளது. இங்கு சந்தனக்கூடு கொடிமர விழா நடைபெற்றது.
அலங்காநல்லூர் அருகே அய்யூர் கிராமத்தில் அரபு மஸ்தான் பள்ளிவாசல் உள்ளது. இங்கு சந்தனக்கூடு கொடிமர விழா நடைபெற்றது. இதனையொட்டி கொடி மரங்கள் அழைக்கப்பட்டு பள்ளி வாசலுக்கு வந்தன.

பின்னர் பொது கொடிமரம், சந்தனம், ஜவ்வாது, மல்லிகை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இன்னிசை முழங்க ஒயிலாட்டத்துடன் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, மீண்டும் பள்ளிவாசலை அடைந்தது.

அத்துடன் மற்ற கொடிமரங்களும் ஒன்றாகவே ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. விழாவில் ஏராளமான முஸ்லிம்கள் மற்றும் சுற்றுவட்டார மக்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அய்யூர் முஸ்லீம் ஜமாத்தார்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News