ஆன்மிகம்

சாபம் தீர்க்கும் பரிகாரங்கள்

Published On 2019-05-15 06:23 GMT   |   Update On 2019-05-15 06:23 GMT
முன் வினை கர்மாக்கள், பித்ரு தோஷங்கள், சாபங்கள் போன்றவை சில எளிய பரிகாரங்களை செய்வதன் மூலம் அகலும். அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
முன் வினை கர்மாக்கள், பித்ரு தோஷங்கள், சாபங்கள் போன்றவை சில எளிய பரிகாரங்களை செய்வதன் மூலம் அகலும். அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

* ஜென்ம நட்சத்திரம் அன்று அகத்திக் கீரையை பசுவிற்கு கொடுத்து தடவிக் கொடுப்பது.

* அதிகாலையில் சூரிய நமஸ்காரம் செய்தல் மற்றும் சூரிய காயத்ரி மந்திரம் படித்தல்.

* எறும்புக்கு பச்சரிசி போடுதல் (பச்சரிசி மாவில் கோலம் போடலாம்).

* சங்கடம் தீர சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பது.

* ஆனைமுகனுக்கு அருகம்புல் மாலை சூட்டி வழிபடுவது.

* வீட்டுத் துளசி மாடத்தில் விளக்கு ஏற்றி தீப வழிபாடு செய்தல்

* காகத்திற்கு கருப்பு எள் கலந்த சோறு வைத்தல்.
Tags:    

Similar News