ஆன்மிகம்

சர்ப்ப தோஷங்களும் பரிகாரங்களும்

Published On 2019-02-27 09:06 GMT   |   Update On 2019-02-27 09:06 GMT
சர்ப்ப தோஷங்களுக்கு திருப்பாம்புரம் கோவிலில் முறையாக பரிகாரம் செய்து கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். இந்த கோவிலில் பரிகாரம் செய்யும் முறையை பார்க்கலாம்.
1. ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் இருந்தால்
2. 18 வருட ராகு தசா நடந்தால்
3. 7 வருட கேது தசா நடந்தால்
4. லக்னத்திற்கு 2-ல் ராகுவோ கேதுவோ இருந்து லக்னத்திற்கு 8-ல் கேதுவோ, ராகுவோ இருந்தால்
5. ராகு புத்தி, கேது புத்தி இருந்தால்,
6. களத்திர தோஷ­ம் இருந்தால்,
7. புத்திர தோஷ­ம் இருந்தால்,
8. ஆண், பெண் இருபாலருக்கும் திருமணம் தடைபட்டால்
9. கனவில் அடிக்கடி பாம்பு வந்தால்,
10. தெரிந்தோ, தெரியாமலோ பாம்பை அடித்திருந்தால்,
11. கடன் தொல்லைகள் இருந்தால்.

இவை அனைத்தும் திருப்பாம்புரம் தலத்தில் வழிபட்டால் நிவர்த்தி கிடைக்கும்.

வழிபாடு செய்வது எப்படி?

இத்தலத்திற்கு வந்து ஆதிசேஷ தீர்த்தத்தில் நீராட வேண்டும். பிறகு வஸ்திர தானம் செய்ய வேண்டும். இதைத் தொடர்ந்து திருக்கோயில் அலுவலகத்தில் பணம் செலுத்தி அச்சு ரசீதுப் பெற்றதும், பரிகாரத்திற்கு உரிய அபிஷேக சாமான்கள், வெள்ளி நாகம், பால் வழங்கப்படும்.

ஆலய அர்ச்சகர் வழி நடத்தும் வண்ணம் வெள்ளி நாகத்திற்கு பால் அபிஷேகம் செய்து பின்னர் ராகு, கேது பகவானுக்கு அபிஷேகம் செய்து, நீலம் மற்றும் பலவண்ண ஆடைகள், மல்லிகை, செவ்வரளி, நாகலிங்க பூ இவைகளில் ஏதேனும் ஒன்றை சாற்றி உளுந்து, கொள்ளு பொடி நிவேதனம் செய்து, பின்னர் அன்னதானம் வழங்க வேண்டும். முடிவில் புற்றுகோயில் வழிபாடு செய்வதின் மூலம் அவரவர் தோஷங்கள் விலகிவிடும் என்பது திண்ணம்.

Tags:    

Similar News