ஆன்மிகம்

கல்வியில் முன்னேற மகத்தான பரிகாரம்

Published On 2019-02-25 02:24 GMT   |   Update On 2019-02-25 02:24 GMT
சில பிள்ளைகளுக்கு மறதி அதிகமாக இருக்கும். சந்திரன் ஒருவர் ஜாதகத்தில் பலம் பெற்றிருந்தால் தான், நினைவாற்றல் நன்றாக இருக்கும். இதற்கு சிறந்த பரிகாரம் என்னவென்று பார்க்கலாம்.
சில பிள்ளைகளுக்கு மறதி அதிகமாக இருக்கும். எதைச் சொன்னாலும் அடுத்த நிமிடமே மறந்து விடுவார்கள். பெரியவர்களும் கூட சில நேரங்களில் சில காரியங்களைச் செய்ய மறந்து விடுவார்கள். ‘மறதி’ என்ற மூன்றெழுத்துக்குள் தான், ‘மதி’ என்ற இரண்டுஎழுத்தும் இருக்கிறது. ‘மதி’ என்றால் சந்திரன் என்று பொருள்.

சந்திரன் ஒருவர் ஜாதகத்தில் பலம் பெற்றிருந்தால் தான், நினைவாற்றல் நன்றாக இருக்கும். நிகழ் காலத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள இயலும். மேலும் ஜாதகத்தில் ‘ஞானகாரகன்’ கேதுவும், ‘வித்யாகாரகன்’ புதனும், படிப்பு ஸ்தானத்தோடு சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். அப்பொழுது தான் கல்வியிலும் தேர்ச்சி பெற்றவராக விளங்குவர். மறதி இல்லாத மனிதராக வாழ்ந்து மகத்தான சாதனைகளைப் படைக்க முடியும்.

சரஸ்வதிக்கு கூத்தானூரில் கோவில் இருக்கிறது. சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியிலும் சரஸ்வதிக்கு தனி ஆலயம் இருக்கிறது. இது போன்ற கோவில்களுக்கும், ஹயக்ரீவர் வீற்றிருக்கும் ஆலயங்களுக்கும் கேதுவிற்குரிய புராதனக் கோவில்களுக்கும், ஞானாம்பிகை வடிவில் அம்பிகை வீற்றிருக்கும் ஆலயங்களுக்கும் படிப்பில் குறைபாடுள்ள பிள்ளைகளை அழைத்து சென்று வழிபாடு செய்து வந்தால், கல்வியில் தேர்ச்சி பெற்றவராகவும், காசினியோர் போற்றும் வாழ்க்கையை அமைத்துக் கொள்பவர்களாகவும் மாறுவர்.

Tags:    

Similar News